எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற போது உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் ராஜேந்திரன் – ஜீவா தம்பதியினர் வசித்து வருகிறார் இவர்களது மகன் ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்த இந்நிலையில் மகனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியை வழங்கினார் மேலும் வானகிரியில் நடைபெற்ற மகளிர் உரிமைத் தொகை சேர்க்கை முகாமை பார்வையிட்டு மகளிர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார் இந்நிகழ்வின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என். ரவி தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *