திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் வளாகம் அருகே சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அத்திப்பேடு ஆர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலாளர் குமார் அனைவரையும் வரவேற் றார். இதில் சிறப்பு அழைப்பாள ராக சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர் சண்முகம் பங்கேற்றார். மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மோகனா ரவி, நாகலட்சுமி ஐயப் பன், யுவராஜ், கணபதி, பவானி தனசேகரன், ராமச்சந்திரன், கீதா கதிரவன்,வித்யா தமிழரசன், உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிராம மக்கள் தங்க ளது கோரிக்கையை குறித்து தெரி வித்தனர் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலை வர் ஆர்.ரமேஷ் தெரிவித்தார். பின்னர் மாவட்ட நிர்வாகம் தெரி வித்திருந்த கோரிக்கைகள் குறி த்து விவாதிக்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் மகளிர் குழு பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது நத்தம் ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள கிராம சேவை மை யம் கட்டிடத்தில் நடைபெற்ற சுதந் திர தின கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கணபதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டி எஸ் வெங்க டேசன் முன்னிலையில் வைத்தார்.
ஊராட்சி செயலாளர் கோமதி அனைவரையும் வரவேற்றார். கூட் டத்தில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் ஒன்றிய அலுவலக ஊழியர் உமா மகேஸ்வரி பங்கேற் றார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேகா,நாகராஜன், பாரதி, ரஞ்சினி, குணசேகரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்திருந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலை வர் லட்சுமி கணபதி தெரிவித்தார்.
இதில் கிராம பெண்கள் பொதுமக் கள் மகளிர் குழுவினர் என ஏராள மானோர் கலந்து கொண்டு மாவ ட்ட நிர்வாகம் விவாதிக்கக் கூடிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.