கோவை பேரூரில் சேரன் கல்வி குழுமத்தின் 33வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது.

1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேரன் கல்வி குழுமத்தின் கீழ் கோவை, திருப்பூர்,நீலகிரி,ஈரோடு, உள்ளிட்ட இடங்களில் சேரன் கலை அறிவியல் கல்லூரி,நர்சிங் கல்லூரி, பார்மசி கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, மகளிர் கல்லூரி, எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, உள்ளிட்டவை இயங்கி வருகிறது.

இந்நிலையில் சேரன் கல்விக் குழுமத்தின் 33வது நிறுவனர் தின விழா கோவை பேரூர் பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் மாணவர்களின் கல்வித் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது.

மேலும் இலவச கண் பரிசோதனை முகாம், இலவச மருத்துவ முகாம் சமூக விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. மேலும் சேரன் நர்சிங் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ராஜஸ்தான் அரசின் சார்பில் சிறந்த செவிலியர் விருது பெற்ற சுனில்குமார் பாட்ரியா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். தொடர்ந்து மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சீதா லட்சுமி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள்,முனைவர் மீனாகுமாரி, முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் நாகராஜ பெருமாள், டாக்டர் கார்த்திக் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *