கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்
29-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை!!
காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-
அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு
காட்டுமன்னார்கோவில்
இளைஞர் நலன் விளையாட்டு. மேம்பாட்டுதுறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட துறை அமைச்சர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 29-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகை தர விருப்பதையொட்டி கிழக்கு மாவட்ட தி.மு. க செயலாளர் , கழக உயர்நிலை செயல்திட்டக்குழுஉறுப்பினர் வேளாண்மை – உழவர் நலத்துறை தஅமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
இதில்மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன்
கடலூர் சட்டமன்ற உறுப்பினர், ஐய்யப்பன்,
கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள புகழேந்தி, இளைஞர் அணிமண்டல பொறுப்பாளர் அப்துல் மாலிக்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநகர, ஒன்றிய ‘நகர, பேரூர் இளைஞர் அணியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திற்க்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் ,மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ,கழக செயலாளர்கள்மற்றும் மாவட்ட,மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இராமலிங்கம், நகர செயலாளர் கணேச மூர்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.