சத்தியமூர்த்தி செய்தியாளர் மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் அறிஞர் அண்ணாவின் 115வதுபிறந்த தினத்தை முன்னிட்டு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் டி ஆர். சண்முகசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெகரிபா பர்வீன்,துணைத் தலைவர் அருள் வடிவு, தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப்பலி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம், வடக்கு மற்றும் தெற்கு நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், வக்கீல் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

முன்னதாக முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த
தி மு கவினர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *