தேவகோட்டை – தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களை வரவேற்றார்.
அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்கள் குறித்து அஞ்சலக தலைமை அதிகாரி செல்வராஜ், மற்றும் சி.பி.சி மேலாளர் சரவணன் , அஞ்சலக அதிகாரி சஷாங் சவுத்திரி, அஞ்சலக அலுவலர்கள் அனைவரும் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.