கோவை

ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள்..

கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக அதற்கான போட்டிகள் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் சார்பில் நடைபெற்றது.

இதில் கோவை மண்டலத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சின்னவேடம்பட்டி, நீலம்பூர், காந்திபுரம், இடிகரை மற்றும் திருப்பூர் ஆகிய 5 கிளைகளைச் சேர்ந்த 120 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.ஜூனியர்,சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற கணிதம் சார்ந்த போட்டியில் பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் ஜூனியர் பிரிவில் இடிகரை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியும்,சீனியர் பிரிவில் சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வெற்றி பெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இதில் கல்வி இயக்குநர்கள் சீமா போப்பண்ணா, இயக்குநர் நாகேந்திரா கரு, டிஜிஎம் ஹரிபாபு, ஏஜிஎம் நாகேஸ்வர ராவ், மண்டல பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் துர்கா பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியின் போது ஸ்ரீ சைதன்யா சின்னவேடம்பட்டி முதல்வர் கிளாடிஸ் டயானா, ஸ்ரீ சைதன்யா நீலம்பூர் முதல்வர் ஸ்வாதி ரெட்டி, ஸ்ரீ சைதன்யா இடிகரி முதல்வர் அனிதா, ஸ்ரீ சைதன்ய திருப்பூர் முதல்வர்மகாலட்சுமி, ஸ்ரீ சைதன்ய காந்திபுரம் பிரின்சிபா ஸ்ரீ. அனிஷ் அகஸ்டின் ஆகியோர் உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *