ராஜாவூர் அரசு பள்ளியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய மாணவ மாணவிகள்

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த ராஜா ஊரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று மாணவர்கள் அனைவருக்கும் பலூன்கள் கொடுக்கப்பட்டும் மலர் கொத்து கொடுக்கப்பட்டும் மாணவர்களை பள்ளிக்கு வெளியே ஊர்வலமாக வரவழைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது

அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகம் விலையில்லா
வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

பள்ளிக்கும் ஊருக்கும் ஒன்றியத்திற்கும் மாவட்டத்திற்கும் மாணவர்கள் அனைவரும் படித்தும் மற்ற திறமைகளிலும் பெயர் வாங்கிக் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்

ஆங்கில வருடப் பிறப்பு முதல் நாள் என்பதால் மாணவர்களுக்கு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் கேக் மட்டும் இனிப்பு வழங்கப்பட்டது முதல் நாளில் நல்லாசிரியர் இந்திரா அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை எடுத்துக் கூறினார்

இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *