வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவின் பேரில், இனாம் கிளியூர் கால்நடை மருந்தகம் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ரங்கராஜன் தலைமையில், இனம் கிளியூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் மற்றும் பணியாளர்கள் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி பணி, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை, தாது உப்புக் கலவை வழங்குதல், விவசாய கடன் அட்டை (கே சி சி) விண்ணப்பம் பெறுதல், கோமாரி தடுப்பூசி போடுதல் மற்றும் கால்நடைத்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை பராமரிப்பு தொடர்பான ஆலோசனை வழங்குதல், முகாமில் கிடையேரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும், மூன்று சிறந்த கிடையேறி கலப்பின கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மை விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர், இனாம் கிளியூர் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும்நல்லூர் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற்றனர்.