பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தமிழின மக்களின் பண்பாட்டின் வெளிச்சமாக தமிழ் புத்தாண்டு பொங்கல் உழவர் திருநாள் கட்சியின் தலைவர் சுபா இளவரசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் தமிழின மக்களின் வாழ்வின் வெளிச்சமாக உதயம் பெற்று கொண்டாடப்படும் புத்தாண்டின் முதல் நாள் போகிப் பண்டிகை பழையன கழிதலும் புதிய தின தொடங்கி தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உயிரோட்டமான பண்டிகையான தமிழர் திருநாள் உழவர் திருநாளாக பொங்கல் திருநாளாக போகி பண்டிகை , வாசல் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என சூரியனுக்கும் மாடுகளுக்கும் உழைக்கும் மனிதர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக புது நெல்லை அறுவடை செய்து பச்சரிசியில் பொங்கல் இட்டு வணங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா குறித்து தமிழர் நீதி கட்சி, மற்றும் ஏர் உழவர் சங்கத்தின் தலைவர் சுபா இளவரசன் தெரிவித்ததாவது இந்த நாளில் தமிழர் நீதி கட்சியும் , ஏர் உழவர் சங்கமும் தமிழின மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.