பாபநாசம் அருகே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா விழுதியூர் ஊராட்சி மணக்குடி கிராமத்தில் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 22 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது

அதன்படி நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை காவல்துறை தீயணைப்பு துறை மின்சாரத்துறை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட 22 வீடுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன.

பாபநாசம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பானுதாசன் உதவி பொறியாளர் ரவி தாசில்தார் மணிகண்டன் காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *