நல்லூர் மேற்குத் திருநெல்வேலி மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா :-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்குத் திருநெல்வேலி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவி களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை,பகுத்றிவு பாசறை மாவட்ட அமைப்பாளர் எழில்வாணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அருள் போதகர் பிரேஜேம்ஸ், .
ஜெபம் செய்தார்,தலைமை ஆசிரியர் வசந்தி ஜான்சிராணி, வரவேற்று பேசினார்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் 410 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி பேசினார்

இவ்விழாவில் தகவல் தொழில் நுட்ப அணி மணிமாறன்,தலமை செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்டி கே ராஜ், தொழில் அதிபர் மணிகண்டன், ஆசிரியர் பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் வில்லியம் பீட்டர் ராஜ், நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *