7 ஆயிரத்து 500 கை பெருவிரல் ரேகைகளை கொண்டு இந்திய தேசிய கொடி உருவாக்கி சிறுமி உலக சாதனை முயற்சி :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஞானசெல்வன் – எஸ்தர் இவர்களின் மகள் ஜுடித்கிப்டி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ஓவியத்தில் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டு, 6 x 4 அளவிலான வெள்ளை ஓவிய தாளில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை மற்றும் நீலம் ஆகிய அக்ரிலிக் வண்ணங்களை பயன்படுத்தி 7500 முறை கை பெருவிரல் ரேகைகளை கொண்டு இந்திய தேசிய மூவர்ண கொடியை 3 மணி நேரம் 53 நிமிடங்களில் உருவாக்கி உள்ளார்.

சிறுமின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *