திருப்பூர் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூரில் திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பா வடிவேல் தலைமையில் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ,முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளரை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மக்கள் டிவி பாலாஜி தினசங்கு பெர்னாட்ஷா தினமடை பாபு செய்தி அலசல் சின்னமணி தந்தி முரசு மலைக்கண்ணன் தகவல் டுடே வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *