கிருஷ்ணகிரி மாவட்டம்,அகரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 75 வது குடியரசு தின விழா , தமிழ்க் கூடல் விழா மற்றும் புரவலர்களுக்கான_ பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர். க .பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவொளி ராமமூர்த்தி, பெருமாள் துணைத் தலைவர்கள் முரளி, பெரியண்ணன் மற்றும் புரவலர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களிடையே கலை நிகழ்ச்சி மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

மற்றும் விளையாட்டுகளில் மண்டல அளவிலான முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல், இனிப்புகள் வழங்கப்பட்டது இதை தொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நடராஜ் நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *