வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிர தொழிலாளர் யூனியன் டி சி டி யு சார்பாக 75 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி மற்றும் பல பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் டி சி டி யு சார்பாக 75 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு டி சி டி யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் குலாம் மைதீன் தலைமை வகித்தார்,

நகரத் தலைவர் அகமது மைதீன், சமத்துவ மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக வலங்கைமான் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பெரிய பள்ளி வாசல் ஜமாத் தலைவர் காதர் உசேன்,செயலாளர் அப்துல் சலீம், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், ஹஜரத் நாகூர் கனி, கோல்டன் மளிகை சரிப் ஜமாலி, ஜாமியா மஜித், அப்துல் மாலிக், அன்வர் அலி, முகமது இப்ராஹிம் கலந்து கொண்டனர். முன்னதாக நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவரணி பகீம், அப்துல் ரகுமான் கொடி பாடல் பாடினர்,பெரிய பள்ளி ஜமாத் தலைவர் காதர் உசேன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி, ஜமாலி ஜாமியா,மஜித்,அப்துல் மாலிக் கொடியேற்றினர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள், இதில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *