திருப்பத்தூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர் சிதம்பரம் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் நகர தலைவர் பாரத், மாவட்ட துணை தலைவர்கள் முருகன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சிதம்பரம் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் யூகம் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் ஒன்றிய தலைவர்கள் தண்டபாணி, சாந்தசீலன், முனியப்பன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *