வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் எண்ணிக்கை மூலம் ரூபாய் 19 லட்சத்து 48 ஆயிரத்து 469ரொக்கமும், பொன் இனங்கள் 0.344 .940 கிராமும்,வெள்ளி இனங்கள் 0.558.740 கிராமும்காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஆறு நிரந்தர ஊண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி மகா மாரியம்மன் ஆலய செயல் அலுவலர் அ.ரமேஷ்,தக்கார்/ஆய்வர் மும்மூர்த்தி, திருக்கண்ணமங்கை ஆய்வர் எஸ் தமிழ்மணி, நன்னிலம் ஆய்வர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து, திருவாரூர் ஐயப்பா சேவா சமாஜ் சங்கத்தினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். ஆறு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 19 லட்சத்து 48 ஆயிரத்து 469 ரொக்கமும், பொன் இனங்கள் 0.344.940 கிராமும், வெள்ளி இனங்கள் 0.558.740 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சியை ஆலய செயல் அலுவலர் அ.ரமேஷ், தக்கார் /ஆய்வர் மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *