திருப்பத்தூரில் அதிமுக சார்பில் பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில் குமார், முன்னாள் எம்எல்ஏ கள் கே.ஜி.ரமேஷ், கோவி. சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தம்பா கிருஷ்ணன், மற்றும் அதிமுகவின் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *