திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பள்ளி வகுப்பறைகள், கட்டிட வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே கல்வி தரம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மாணவ மாணவிகளிடம் இளம் வயதில் கல்வி கற்பதை கடமையாக கருதுவதுடன் அரசின் அனைத்து கல்வி நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என கூறினார். பின்னர் ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வகுப்பறைகளை பார்வையிட்டு பள்ளி மாணவருடன் கலந்துரையாடினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு. நாவளவன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *