தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியை தே.ஜூலியட் மல்லிகாபாய் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ் யசோதா மற்றும் ஆலங்குளம் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கினைப்பாளர்முருகேசன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
மாணவர் சேர்க்கை யினை தொடங்கி வைத்து பெற்றோர்களிடம் அரசு திட்டங்களான
இல்லம் தேடி கல்வி,நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம் , கலைத் திருவிழா கோட கொண்டாட்டம் சிறார் திரைப்பட விழா, வானவில் மன்றம் ,அனைவருக்கும் காலை உணவு திட்டம், பள்ளியின் பெருமை காலை சிற்றுண்டி இது போன்ற 43 – க்கும் மேற்ப்பட்ட திட்டங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

இந்த நிகழ்வில், ஆசிரியர் லாரன்ஸ் ஞானதுரை,
ஆசிரியைகள் சரஸ்வதி மேரி, மதலேன் மரிய பெனிதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், இந்திரா,இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்
கலைச்செல்வி, லெட்சுமி மற்றும்
பெற்றோர்கள் கலந்து கொண்டார் கள்
நிறைவில் சேர்க்கை பேரணியும் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *