தென்காசி மாவட்டஆட்சித் தலைவர்
அலுவலகக் கூட்ட அரங்கில்
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை சார்பாக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இத் திட்டம் தகுதி வாய்ந்த பயனாளிகள்
தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 102 பயனாளிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் 6 மாதம் தையல் பயிற்சி முடித்த மற்றும் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் உள்ள தகுதி வாய்ந்த 65 பயனாளிகள் தேர்வு செய்யட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்நிகழ்வில் 30 மோட்டார் இயந்திரம் பொருந்திய தையல் இயந்திரம் ரூ.156000/- மதிப்பிலும் மற்றும் 35 நவீன உயர் ரக தையல் இயந்திரங்கள் ரூ.264250/- மதிப்பிலும் மொத்தம் 65 பயனாளிகளுக்கு 65 தையல் இயந்திரங்கள்
ரூ.420250/- மதிப்பில் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *