தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கி ஷோர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்தும், சுவிதா என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள், கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது

பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவுரைகள், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் ஆம்ஆத்மி, பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ். அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *