கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவநந்தி, உதவி தேர்தல் அலுவலர் மற்றும் தனித்துனை ஆட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.