புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்கு தொகுதியில் இன்று இரவு பரப்புரையை தொடங்கி முடித்தார்.

   நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் என ரங்கசாமி காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளிலும் இன்றும் நாளையும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 பரப்புரையின் முதல் நாளான இன்று கோட்டுச்சேரி நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட பூவம் பகுதியில் இருந்து இன்று மாலை வரை பரப்புரையை தொடங்கினார். பின்னர் இன்று இரவு வடக்கு தொகுதியின் அமைச்சர் பி. ஆர்.என்.திருமுகன் சார்பில் புதுச்சேரி  வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி பிரச்சார வாகனத்தில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.

 அப்போது பேசிய அவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கிடைக்க பெறும் என்பதால் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 அதனைத் தொடர்ந்து காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட   பகுதியிலும் பரப்பரையை மேற்கொண்டார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *