செய்தியாளர் கே தாமோதரன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் சோனா என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அருகில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற ராஜேஷ் எனபவர் கேக் வங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு சென்று தனது தந்தை மற்றும் மகனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அதனை சாப்பட்ட இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து அவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ராஜேஷ் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த பணியாளர்களிடம் இது குறித்து விசாரித்தார் மேலும் காலாவதியான கேக்கை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு கடைக்கு பூட்டு போட்டு சென்றார்.
பல்லடம் அருகே கேக் சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உட்பட இரண்டு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலாவதியான கேக்கை விற்பனை செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடுத்தக்கது.