கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை ஸ்ரீ நாக சாய் மந்திர் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர்
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நாகசாய் மந்திர் வளாகத்தில் நடைபெற்றது கோவிலின் செயலாளர் பாலசுப்பிரமணியம் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் சர்வோத்தமன் தியாகராஜன் சுகுமார் சந்திரசேகர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் துவங கிய விழா கடந்த 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காகட ஆரத்தி கொடியேற்றம் கணபதி ஹோமத்துடன் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மத்தியான ஆரத்தி மாலை ஆரத்தி என சிறப்பு பூஜைகளுடன் விழா தொடர்ந்து நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் மகளிர் அணி சார்பாக ஸ்ரீ நாக சாய் பஜன் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றன
விழாவில் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசித்துச் சென்றனர்