கோவை தெற்கு மாவட்டம் , சூலூர் தெற்கு ஒன்றியம், கரவளிமாதப்பூர் ஊராட்சி , இராமாச்சியம்பாளையம் கிராமத்தில் மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்றது.
தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இராமாச்சியம்பாளையம் கண்னண், கிளை செயலாளர் செந்தில், தனசேகர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்கள் சார்பில் குமார், ரங்கசாமி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஒன்றிய பொருளாளர் சூலூர் வடிவேல், மாதப்பூர் ஜெயக்குமார், குமார் (எ) செந்தில், கணேசமூர்த்தி, பூண்டு செல்வம், டெய்லர் பாலு மற்றும் மகளிர் உட்பட பலர் கலந்து கொண்டணர்.
திமுகவின் வெற்றி வேட்பாளர் .கணபதி ப.ராஜ்குமார் அவர்களுக்கு அனைவரும் வாக்களிப்பது மற்றும் அவரது வெற்றிக்கு கடுமையாக உழைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு, அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது.