பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு ஆடியோ வெளியிட்டவர் மர்ம நபர்களால் தாக்குதல்..
மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் 100-க்கணக்கானோர் அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் கூடியதால் பதட்டம். காவல்துறை பேச்சு வார்த்தையில் உடன்பாடு..
தஞ்சாவூர் மாவட்டம் களஞ்சேரியில் ஸ்ரீ வேத வித்யா குருகுலம் அமைந்துள்ளது. இதனை சீதாராமன் என்பவர் நடத்தி வருகிறார். இவர், பிரமணர்களுக்கு எதிராக ராட்சத கூட்டமான திரவிட கழகம், தி.மு.க போன்ற அசுர குணம் உள்ளவர்கள் அழித்து நமக்கு பாதுகாப்பான ஆட்சிக்கொடுக்க ஆள் கிடைத்து விட்டார். அதேபோல் எல்லா பிரணமர்களும் தாமரை பூ சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும். பொய், புளுகு பேசி மக்களை ஏமாற்றி கெட்ட வழிக்கு அழைத்துக்கொண்டு போகிறார்வர்கள் கையில் தேசம் போக கூடாது எனபதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவரும் பிராமணர்களுக்கு ஒற்றுமை இல்லை என்பதை உடைக்க வேண்டும் என ஆடியோ ஒன்றை வெளயிட்டார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து நேற்று காலை சீதாராமன் வாக்கிங் சென்ற போது மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சீதாராமன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீதாராமனை தாக்கிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர். இதனையடுத்து அவர்களிடத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அனைவரும் கலைந்து செய்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பதட்டம் காணப்பட்டது.