புழல் அடுத்த புத்தகரம் மதுரா மேட்டு தெருவை சேர்ந்தவர் துர்கேஷ் ( வயது 25) இவர் அப்பகுதியில் தண்ணிர் கேன் வியாபாரம் செய்யும் தனது தந்தையிடம் வேலை செய்து வருகிறார்.
இவருடைய நண்பர் தினேஷ் (வயது 24) இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறனர்.
இந்நிலையில் தினேஷின் நண்பர் புத்தகரம் லஷ்மிபுரத்தை சேர்ந்த சாமிநாதன்( வயது 25) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பென்னை காதலித்தார். இதற்கு தினேஷ் தூதுவனானக இருந்துள்ளார்.இந்நிலையில் தினேஷிம் அந்தப்பென்னை காதலிப்பதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாமிநாதன் தினேஷிடம் நைசாக பேசி ஒரு இடத்திற்கு பேச வரச்சொல்லி அவரை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இது தெரியாமல் தினேஷ் தன்னுடன் வேலை செய்த துர்கேஷை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றபோது அவ்விடத்தில் ஏற்கனவே சாமிநாதன் நண்பர்கள் அஷ்வின்குமார் (வயது 25) மற்றும் எபினேசர் (வயது 25) ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற இவர்களையும் மது அருந்த வற்புறுத்தியதால் இரண்டு தரப்பினரும் வாய்தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதனை தடுத்த துர்கேஷை எதிர் கோஷ்டியினர் ஆத்திரத்தில் தன்னிடமிருந்த பீர் பாட்டிலால் தோள்பட்டையில் குத்தியதால் இரத்தம் பீறிட்டு வலியால் துடித்த அவரை காப்பாற்ற அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்த புழல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திலிருந்த சாமிநாதன் அஸ்வின் குமார் எபினேசர் ஆகிய மூவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெண்ணுக்காக தகராறில் ஈடுபட்டதாகவும் கொலை முயற்சியில் பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் தெரியவந்தது.பின்னர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மூவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.