செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
வந்தவாசியில் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்பிகேஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அகாடமி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெ. பார்த்திபன், பேராசிரியர் தென்னாங்கூர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் விஜயகாந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் பங்கேற்று, இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை அனைத்து பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்த நிகழ்வில் எய்டு இந்தியா திட்ட மேலாளர் க.முருகன், சிலம்பம் பயிற்சியாளர் சந்தோஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அனைத்து மாணவர்களும் பங்கேற்ற சிலம்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் முதுகலை ஆசிரியர் மருதாடு முரளி நன்றி கூறினார்.