திண்டுக்கல்லில் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது,இருசக்கர வாகனம் பறிமுதல்

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50) என்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.


இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசி டிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *