கோவை மதுக்கரை பகுதியில் முத்தூட் மினி பைனான்சியர்ஸ் மதுக்கரை கிளை சார்பாக நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது.இதில் பசுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில்,பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்..

இதன் தொடர்ச்சியாக கோவை மதுக்கரை பகுதியல் மேத்யூ குழுமங்களின் முத்தூட் மினி பைனான்சியர்ஸ் மதுக்கரை கிளை சார்பாக நீர் மோர் பந்தல் துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

.மண்டல மேலாளர் மனோகர் ராயன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மதுக்கரை கிளை மேலாளர் நிர்மலா தேவி ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினர் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அதனை வீடுகளில் வளர்க்க அறிவுறுத்தினர்.

முன்னதாக நீர் மோர் பந்தலை மதுக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ,சிந்து,செந்தில் குமார்,சின்னராஜன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்

இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் ராகேஷ்,மண்டல அதிகாரி ஆனந்த் பாபு உட்பட முத்தூட் மினி பைனான்சியர்ஸ் மதுக்கரை கிளை ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *