ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் சங்க மேற்பார்வையாளர் பணி நிறைவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேற்பார்வையாளராக என் பாலசுப்பிர மணியம் என்பவர் கடந்த 33 ஆண்டுகளாக பணியாற்றி பணி நிறைவு செய்துள்ளார்.

இவருக்கு பாராட்டு விழா கூட்டுறவு தனி அலுவலர் சங்கர் தலைமையில் சங்க மேலாளர் முருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் திமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர்பிகே விஜயன், தேமுதிக நகர செயலாளர் கே.பி. குமார், விஜயகுமார், சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் பாராட்டுதல்களுக்கு நன்றி தெரிவித்து பாலசுப்பிரமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *