உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் ‘உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சைகள்”சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு துணைத் தலைவர் இரா. சரவணன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பீ. ரகமத்துல்லா, வந்தை பிரேம், தலைமை ஆசிரியர் க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, டாக்டர் ஜி.எஸ். கோகுல கிருஷ்ணன் பங்கேற்று, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் ரெட் கிராஸ் சங்கத்தின் உலகலாவிய சேவைப் பணிகள் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்தார். இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் இரா. அருள் ஜோதி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.