தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முருகன் என்பவர் பார் நடத்தி வருகிறார் . இந்த பாரில் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த (60) வயது முதியவர் குருசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அங்கு வந்த கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த சங்கர பாண்டியன் என்ற மூக்கையா என்பவர் குருசாமியுடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே சங்கரபாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பார் ஊழியர் குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சங்கர பாண்டியனை தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *