கயத்தாறு சுங்கச்சாவடியில் நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கயத்தாறு சுங்கச்சாவடியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

இந்த சிறப்பு முகாமை கயத்தாறு சுங்கச்சாவடி தலைமை மேலாளர் சிவக்குமார் தலைமையேற்று துவக்கிவைத்தார்

இந்த முகாமில் சுங்க சாவடி பணியாளர்களுக்கு முதற்கட்டமாக எக்ஸ்ரே மூலமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் எக்ஸ்ரே பரிசோதனை செய்த நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கபட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் நீரழிவு பரிசோதனை மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது

மேலும் இம் முகாமில் கிளை மேலாளர் சந்திர ராவ் மற்றும் கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வுகூட மேற்பார்வையாளர் தன செல்விசோபியா மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் அகிலா மற்றும் தன்னார்வலர்கள் கனகலட்சுமி ,மஞ்சுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்

காசநோய் கண்டறியும் முகாமை சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *