பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து தமிழக கேரள எல்லை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்

தென்னை மரத்தில் ஏறி கள் இறக்கம் தொழிலில் ஈடுபட்டு வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும மாணவன் ஜீவாவுடன் பொள்ளாச்சி செல்வதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் ஜமீன் முத்தூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது கேரள மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவனும் கூலி தொழிலாளியும் பலியான சம்பவம் மீனாட்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *