R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
சில நேரங்களில மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் தீ விபத்தினை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலர்கள் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டிருக்கும் தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் மற்றும் ஆபத்து காலங்களில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை எளிதான முறையில் துரிதமாக வெளியேற்றும் முறைகளையும் ஒத்திகை பயிற்சி அளித்தனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சியில் செய்யும் செய்முறை விளக்கத்தையும் செய்து காண்பித்தனர்.