கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ மதுரவீரன் சாமி திருக்கோவில் திருவிழாவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வால்பாறை நகர் மன்ற தலைவர் செ.அழகுசுந்தரவள்ளி செல்வம் அங்கு சிறப்பாக நடைபெற்ற அன்னதானத்தை துவக்கி வைத்தார் அதேபோல மாணிக்கா எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, தாய்முடி எஸ்டேட் ஸ்ரீ அம்மன் கோவில் திருவிழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற மகேந்திரன், பாண்டியராஜன் மற்றும்
அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்