வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்த யாஷினி-20. இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மே-2ஆம் தேதி திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் யாஷினியின் தலையும் உடலும் தனித்தனியாக பிரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலை மேலான போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *