அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் ஏஒய்எம் ஹாலில் நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர்கள் பி சண்முகம் ச அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
அரியலூர் மண்டல செயலாளர் சீராளன் அனைவரையும் வரவேற்று பேசினார் மண்டல செயலாளர் இளவரசிஅருள் மாநில இளைஞர் பாசறை செயலாளர் லட்சுமணன் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் நிர்வாகி செல்வராசு ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூரில் இயங்கும் சிமெண்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும் என சிமெண்ட் ஆலைகளை கேட்டுக் கொள்வது கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவற்றபபட்டன மாநில இளைஞர் பாசறை செயலாளர் லட்சுமணன் அனைவருக்கும் நன்றி கூறினார்