திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள முனியூர் ஊராட்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (வயது 25). பட்டதாரியான இவருக்கும், பூந்தோட்டம் மேலத்தெருவை சேர்ந்த குமார் மகன் மாதவன் (29)என்பவருக்கும் இடையே கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.சுகன்யா தனது கணவர் மாதவனுடன் வசித்து வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மாதவனின் குடும்பத்தினர் சுகன்யா வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைவைக்கக் கோரி சுகன்யா கடந்த 3நாட்களாக கணவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சுகன்யாவிற்கு ஆதரவாக கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், என்னை தரக்குறைவாக திட்டி கணவரின் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகன்யா தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *