பொன்னேரி 

கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு கால அவகாசமும் மாற்று இடமும் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எம் பிரகாஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இடம் ரயில் வேக்கு சொந்தமானது எனக் கூறி காலி செய்து தருமாறு உத்தரவிட பட்டிருந்தது.

இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் பிரகாஷ் தலை மையில்  மாற்று இடம் கோரி மற் றும் ரயில்வே துறையிடம் காலி செய்ய கால அவகாசம் பெற்று தருமாறு அமைதி வழியில் உண்ணாவிரத போராட்டம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

 இது குறித்து தகவல் கிடைத்ததும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நேரில் வந்து உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரி விப்பதாகவும் அதன் பின்னரே இதற்கு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த உண்ணாவிர போராட்டத்தில் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் நகர் குடியிருப்பு வாசிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பின ரும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலருமான பெத்திக்குப்பம் சங்கர், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *