பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வரும் தங்க சரஸ்வதி அவர்கள் சென்னையில் உழைப்பாளர் தினத்தில் உழைப்பால் உயர்ந்தவர் விருது பெற்றார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வரும் தங்க சரஸ்வதி கொரோனா காலங்களில் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியின் பல்வேறு கிராமங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தி செயலாற்றினார்.
அதன் காரணமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் விருதும், நகராட்சி வருவாய் பணியில் சிறப்பாக செயல்பட்டதால் ஜெயங்கொண்டம் ஆணையர் தலைமையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் அவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர் சமூக சிந்தனையாளர் , கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது உட்பட பல சமூகம் சார்ந்த நன்னடத்தை செயல்களுக்கு பல்வேறு விருதுகளை குவித்து வரும் தங்க சரஸ்வதி அவர்களை உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட தலைவர் பா வடிவேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன் கார்மேகம் சாமிநாதன் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமூக ஆர்வலர் தங்க சரஸ்வதி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.