நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள செங்குந்தர் மருந்தியல் கல்லூரியில் “உலக ஆஸ்துமா தினம் ” அனுசரிக்கப்பட்டது. அந்நாளுக்கான சிறப்பு விருந்தினராக மருத்துவர். வ. செல்வராஜ் MD ( Chest ), DTCD, ஆலோசகர் தலையீட்டு நுரையீரல் நிபுணர் & தூக்க மருந்து நிபுணர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சிக்கு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டி. எஸ். ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார்.

செங்குந்தர் கல்வி குழுமத்தின் தாளாளர் மற்றும் செயலாளருமான பேராசிரியர் ஏ. பாலதண்டபாணி இன்றைய நாட்களில் நாள்பட்ட ஆஸ்துமா நோயின் நிலை மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது பற்றி மாணாக்கர்களுக்கு விளக்கி பேசினார்

இந்நிகழ்வில் இக்கல்லூரி மாணவர்கள் “ஆஸ்துமா நோய் கூறு மாதிரிகளை” சிறப்பு விருந்தினர் மற்றும் நிறுவனங்களின் தலைவர், தாளாளர் மற்றும் செயலாளர், முதல்வர், தலைமை நிர்வாக அதிகாரி, வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன தொடர்பு அதிகாரி ஆகியோர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

அதை தொடர்ந்து கல்லூரியின் பொருளாளர் எம். கே. தனசேகரன், கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். சுரேந்திர குமார், தலைமை நிர்வாக அதிகாரி ஏ. பி. மதன், வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன தொடர்பு அதிகாரி அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு உலக ஆஸ்துமா தினம்- 2023 யை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *