கோவை அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு காலை உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டம் சார்பாக பசிப்பிணி போக்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கல்வி உதவி தொகை என பல்வேறு சமுதாய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இந்த சமுதாய நல திட்டங்களை கோவை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பசிப்பிணி போக்கும் திட்டத்தில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் பழங்கள் வழங்கும் நல்லுணவு திட்டத்தை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்கம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நல்லுணவு திட்டத்தின் முன்னூறாவது நாளாக அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு,பழங்கள் வழங்கும் விழா மருத்துவமனை முன்பாக நடைபெற்றது.இதில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டம் ஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முன்னால் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி மற்றும் சாரதா பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிற்றுண்டி,பழங்கள்,பிஸ்கட் போன்ற உணவு வகைகளை வழங்கினர்.
கோவை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க தலைவர் கர்ணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,மாவட்ட மக்கள் தொடர்பு தலைவர் செந்தில் குமார்,மண்டல தலைவர் ரவிசங்கர்,நேரு நகர் அரிமா சங்க தலைவர் ஹரீஷ்,செயலாளர் லோகநாதன்,லயன்ஸ் கிளப் ஆப் அக்‌ஷயம் பொருளாளர் கென்னடி,மற்றும் சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஜாபர் அலி,மெய்யநாதன்,வெங்கடாசலம்,மணிவண்ணன்,குபேந்திரன்,கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *