கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வால்பாறையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரச்செயலாளர் கலைவாணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.பேபி நிர்வாகிகள் பிரபாகரன், யூ.கருப்பையா, குசலவன், அலி, சோடாசெந்தில், சிவலிங்கம், டாக்டர் பவுலோஸ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அலி, அசீஸ், ரஹ்மான்,செபீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்