கர்நாடாகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று கர்நாடாகா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க போவது கிட்டதட்ட இறுதியாக உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை உக்கடம்,டவுன் ஹால்,ஒப்பணக்கார வீதி போன்ற பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் டி எம் எஸ் அப்பாஸ் தலைமை தாங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் ஏ டி ஆர் பத்ருதீன், தொழிற்சங்க மாநிலத் துணைச் செயலாளர் எம் ஐ ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் இப்ராஹிம், நோபல் பாபு, அப்பாஸ் ,சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர்,தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் எம் எஸ் சமீர் அலி வணிகர் சங்கம் மாவட்ட செயலாளர் ஹாரூன் தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *