மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

கள்ளச்சாராயம் கண்டிக்கத்தக்கது, கள்ளச்சாராயம் ஓர் விஷசாராயம் இதனை கட்டுப்படுத்த விடியாத திமுக அரசு தவறிவிட்டதும் அல்லாமல் இதில் திமுக அரசு மெத்தனமாக இருந்துவருகிறது என மன்னாா்குடியில் ஆர். வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினருமான வைத்திலிங்கம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அமமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

என்னைவிட கட்சியின் சீனாயாரிட்டியில் எடப்பாடி பழனிசாமி ஜூனியர். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் 1984ல் ஜனதா தளத்திற்காக வேலை பார்த்தவர். 1986ல் ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலுக்கு நின்று தோல்வியடைந்தவர்.

கடந்தகால மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் நான் தஞ்சை மாவட்டத்திற்காக அம்மாவிடம் கேட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் அதாவது கால்நடை மருத்துவக்கல்லூரி, விவசாய கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்து முன்னுரிமை அளித்து செயல்படுத்தி தந்தவர் அம்மா.

எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது, அண்ணா திமுக வரலாறு தெரியாது ஓரே மேடையில் தமிழ்நாடு, இந்திய, உலக அரசியல் பற்றி விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என சாவல் விட்ட வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசன் இடம் பேசி வருகிறார். இது அவரது மனசாட்சிக்கு தெரியும் என்றார். நாங்கள் தான் உண்மையான அதிமுக என செயல்பட்டு வருகிறோம்.

நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும். அதிமுகவே நாங்கள் தான் எனவும், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம்.

கள்ளச்சாராயம் கண்டிக்கத்தக்கது, கள்ளச்சாராயம், விஷசாராயம் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. அரசு மெத்தனமாக இருந்துவருகிறது நிவாரணம் என்பது கொடுக்கப்படவேண்டிய ஒன்று எனவும், அரசியலுக்காக இதனை குறை கூற கூடாது வரவேற்கிறோம் என்றார்.

தற்போதைய சபாநாயகர் அப்பாவு விஜிலென்சில் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ராதாபுரம் தொகுதியில் கடற்கரை கிராமத்தில் மீன்வளத்துறை மூலம் பணி மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் அரசை ஏமாற்றி பெரும் ஊழல் செய்து உள்ளது குறித்தும், வாக்கிடாக்கில் ரூ.12 கோடி ஊழல் குறித்து முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது.

ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி எனவும் அவர் 3 ஆண்டுக்குள் ராஜ்யசபா சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது.

நாங்கள் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருப்பதை அடுத்து 95 சதவீத அதிமுக தொண்டர்கள் வரவேற்று எங்கள் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். எடப்பாடி அணியினர் காசு கொடுத்து எங்களிடம் உள்ள ஒருசிலரை அழைத்துகொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஓபிஎஸ் விரைவில் சசிகலாவை சந்திப்பார்.

எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கூறிவதில் இருந்து உண்மை நிலை தெரிகிறது. அவர்கள் எங்கள் பக்கம் வரும்போது சேர்;த்துக்கொள்வோம் என்றார். திpராவிட முன்னேற்றக்கழக செயல்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அம்மா ஆட்சிக்காலத்தில் இருந்த திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெற சொல்லுங்கள் டெப்பாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் காமாஜால் வாங்கமுடியாது.

அதிமுக ஒன்றுபடவேண்டும் மீண்டும் தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சி அழிந்தாலும் பரவாயில்லை தான் தான் தலைமையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் என்றார்.

இதில் அமமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் S. காமராஜ், அஇஅதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் சிவநாராயணசாமி, அமமுக மாநில தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் க.மலர்வேந்தன்,
அமமுக மாநில அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் S.சத்தியமூர்த்தி, அமமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.அசோகன் , அமமுக ஒன்றிய, நகர, பேருராட்சி கழக செயலாளர்கள் AR.ஆனந்தராஜ், MS. சங்கர், ப.தனபால், இருள்நிக்கி சேகர், ஓவர்சேரி சேகர், விவேக், அமமுக மாவட்ட கழக நிர்வாகிகள் சரவணச்செல்வன், இளவரசி இளையராஜா, முருகானந்தம், மற்றும் அமமுக, அஇஅதிமுக மாநில, மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *